நாட்டுப்புறப் பாடகர் அனிதா குப்புசாமியின் மகளின் கணவரை பார்த்திருக்கீங்களா?… அட இவர் தானா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே…

மக்களிசை பாடல்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான தம்பதி என்றால் அது புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி தம்பதி தான். தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய நாட்டுப்புறப் பாடகர்களில் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமி.

   

தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி விருது’ பெற்றுள்ள இவர், பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். பிரபல கிராமிய பாடகியான அனிதாவை தான் இவர் திருமணம் செய்து கொண்டார்.

கல்லூரி காலத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த போது இருவரும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். மேலும் பல திரைப்படங்களில் பல பாடல்களை ஒன்றாக இணைந்து பாடியுள்ளனர்.

அந்த சமயத்தில் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். குப்புசாமி அனிதா தம்பதி ஒன்றாக இணைந்து பல சினிமா பாடல்கள் மற்றும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளனர்.

பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள குப்புசாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கு வகித்தவர்.

குப்புசாமி மற்றும் அனிதா தம்பதியினருக்கு பல்லவி, மேகா இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பல்லவி மருத்துவ படிப்பு படித்துள்ளார். இவர்களில் மூத்த மகள் பல்லவி சென்னையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

மூத்த மகளான பல்லவி பாடகர், மருத்துவர் இன்ஃப்ளுயன்சர் என பன்முக திறமை கொண்டவர். இவருக்கு ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பல்லவி. தற்பொழுது இவர் தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இவர்தான் அனிதா குப்புசாமியின் மருமகனா?’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.