”எவ்வளவு அழகா பாடுறீங்க ?”… பாடகி ஸ்வேதா மோகனின் பாடல் கேட்டு மயங்கி போன ரசிகர்கள்…

பாடகி சுஜாதா மோகனின் ஒரே மகள் தான் பாடகி சுவேதா மோகன்.  தனது ஆறு வயதில் இருந்தே பாடல்களை பாடத்தொடங்கியவர்  பாடகி சுவேதா மோகன்.. 10 வயதில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘இனி அச்சம் அச்சமில்லை’ என்னும் பாடலை தனது மழலை மொழியில் அழகாக பாடியிருப்பார்.

   

அதே வருடத்தில் பம்பாய் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘குச்சி குச்சி ராக்கம்மா’ என்ற பாடலையும் ஸ்வேதா பாடியிருந்தார். இவர் பாடிய பல காதல் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் காணப்படுகிறது. இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார்.

இதில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் நடுவர்களாக இருக்கின்றனர். இவர் அஸ்வின் என்பவரை 2011ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.  சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஸ்வேதா மோகன்.

இவர் தற்பொழுது கொச்சியில் நடைபெறும் தனது கான்செப்ட் ஒன்றிற்கு பாட்டு பாடி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவரது குரலை கேட்ட ரசிகர்கள் மயங்கி போய் உள்ளனர் என்று கூறலாம். இதோ அவரின் வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Shweta Mohan (@_shwetamohan_)