சிவகார்த்திகேயன் முதல் சூரி வரை… மனைவியுடன் வந்து ஓட்டு போட்ட பிரபலங்கள்… வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து சென்றார்கள்.

   

தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் வாக்குபதிவு செலுத்தி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், ரஜினி, கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றினர்.

இப்படி வாக்களிக்க வந்த பெரும்பாலான பிரபலங்கள் தங்களது மனைவியுடன் வந்திருந்தார்கள். அவர்கள் யார் யார் என்பதை நாம் பார்க்கலாம்.

முதலாவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து காலையிலேயே வாக்களித்து சென்றார். அதைத்தொடர்ந்து நடிகை சினேகா தனது கணவரான பிரசாந்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தி சென்றார்.

அதேபோல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியான ஆர்த்தியுடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் வந்து தனது ஓட்டினை போட்டுச் சென்றார்.

அதைத்தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் வந்து தனது ஓட்டினை அளித்திருந்தார். நடிகர் நகுல் தனது மனைவியுடன் வந்து தனது ஓட்டினை பதிவு செய்து சென்றிருந்தார்.

அதேபோல நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை செலுத்தி சென்றார்.

காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சூரி தனது மனைவியுடன் வந்து வாக்களித்து சென்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.