கடுமையான குளிரில்… சாலையோரம் தவித்த ஆதரவற்ற ஏழை மக்களுக்கு உதவிய பிரபல நடிகை…. இந்த மனசு யாருக்கு வரும்?… பாராட்டும் ரசிகர்கள்…

கடும் குளிரில் சாலையோரம் வாழும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு பிரபல நடிகை டாப்ஸி உதவிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘ஆடுகளம்’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி. இந்த படம் வெற்றி அடைந்ததன் மூலம் நடிகை டாப்ஸி  தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தார்.

   

இதை தொடர்ந்து அஜித் நடித்த ஆரம்பம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஹாலிவுட்டில்  நடித்த பிங்க், ஷபானா போன்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இவரை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

தற்போது இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என  பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் கடும் குளிரில் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு இவர் உதவி செய்துள்ளார். அதாவது வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கடும் பனி பெய்து வருகிறது. இதனால்  சாலையோரம் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹேம்குந்த் அறக்கட்டளை சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகை டாப்ஸீ அவரும் பல உதவிகளை செய்துள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.