ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ் அமீர் மற்றும் பாவனி ஜோடி… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்….

காதல் ஜோடிகளாக வலம் வந்த பிக் பாஸ் அமீர் மற்றும் பாவனி ஜோடி தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் வீட்டிலேயே அமிர் தனது காதலை பாவனியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்தார் பாவனி. நடிகை பாவனி என்ற  சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

   

இவர் திருமணமான சில மாதத்திலேயே தன்னுடைய காதல் கணவரை இழந்தார். அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவரது  இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பாவனி.

இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அமீர் பாவணியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்து வந்த பாவனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒன்றாகவே காணப்பட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

இதில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடி தங்களது கடின உழைப்பால் டைட்டிலையும் வென்றனர் .தற்பொழுது இவர்கள் வெள்ளி திரையில் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். கோப்பையை வென்றவுடனே தங்களது  திருமண தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறியிருந்தனர்.

தற்பொழுது பிஸியாக வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டு வரும் இவர்கள் திடீரென ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளனர். அதன்படி இருவரும் பிப்ரவரி 15ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.