குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறிய முக்கிய போட்டியாளர்…. இதுதான் காரணமா?… வைரலாகும் தகவல் இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

   

தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த சீசனில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்திகேயன் பட நடிகை ஆண்ட்ரியான்,

ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

இதில் முதல் வாரமே அந்த அறிவிப்பும் இன்றி ஓட்டேரி சிவா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது குக் வித் கோமாளி சீசன் 4ல் மூன்று வாரங்கள் முடிந்து தற்போது 6 எபிசோடுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறியுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. அந்தவகையில் நடிகை விசித்ராதான் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை விசித்ராவின் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்த காரணத்தினால் தான் நடிகை விசித்ரா வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.