‘என் வாழ்க்கையின் இரண்டு பெண்கள்’… விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன் …. அவரை வெளியிட்ட பதிவு இதோ…

செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியை பிரிய போவதாக எழுந்த விவாகரத்து சர்ச்சைக்கு தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

   

இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார் செல்வராகவன். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் டுவிட்டர் பக்கத்தில் தான் நினைக்கும் கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்வது வழக்கம்.

அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர், ‘தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்’ என பதிவு செய்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவர் தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்வதால் தான் இப்படி ஒரு பதிவு போட்டாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செல்வராகவன் தனது instagram பக்கத்தில் மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து ‘என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து செய்யப் போவதில்லை ஒற்றுமையுடன் தான் வாழ்ந்து வருகிறார் என்பதை தன் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். மேலும் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வைரலாகும் பதிவு இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)