மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமந்தா… ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி வெளியிட்ட பதிவு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்….

நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை  இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைத்னயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்று. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

   

இந்நிலையில் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயினால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு அதற்காகவே வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயின் சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென்கொரியாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர் .தற்பொழுது நடிகை சமந்தாவின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நோயின் காரணத்தால் சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருக்கும் நடிகை சமந்தா ,நீண்ட நாட்கள் கழித்து தனது முகத்தில் ஒரு சிறிய சிரிப்புடன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் இந்த பதிவில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தா இந்த நோயிலிருந்து மீண்டு வந்து பழையபடி மீண்டும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அவரது வைரல் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)