தீடிர் அரசியல் U-trun எடுத்த விஷால் அதுவும் மத்திய அரசுக்கு….!! ஓ’ கதை அப்படி போகுதா..?

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மட்டும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் மார்க் ஆண்டனி. இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இப்படமனத்து வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின்  இந்தி பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு ரூபாய் 6.50 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியதாக நடிகர் விஷால்  புகார் தெரிவித்து இருந்தார்.

   

இதை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.  இந்த விவகாரத்தில் உடனடியாக  நடவடிக்கை எடுத்த  மத்திய அரசுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் நடிகர் விஷால் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பை சென்சார் போர்ட் ஊழல் விவகாரம் தொடர்பான விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நான் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். எடுக்கப்பட்ட நடவடிக்கை மிக்க நன்றி ஊழலில் ஈடுபடும் அல்லது ஊழலில் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு அரசாங்க அதிகாரிக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று ஊழலின் படிகளில் அல்ல.

தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையும் செல்வதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என என்று நம்பப்படுகிறது எனது பிரதமர் நரேந்திர மோடி மராட்டி முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே   இயக்குனர் மற்றும் இந்த உடனடி நடவடிக்கை காரணமான அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்னை போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் நம்பிக்கை உணர்வை தருகிறது ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.