விஜய் உடன் நடிக்கும் பொழுது… சிம்ரன் இப்படி ஒரு செயலை செய்தாரா?… கோபத்தில் படப்பிடிப்பை ரத்து செய்த இயக்குனர்… என்ன நடந்தது தெரியுமா?…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் தன் இயக்கத்தில் அவரது மகனான நடிகர் விஜயை பல படங்களில் நடிக்க வைத்துள்ளார்.

   

இன்று அவர் தளபதியாக வலம் வர முக்கிய காரணம் அவர் தந்தையே என்று கூறலாம்.  இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சிம்ரன் என ஒரு  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அப்படி தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த ஆறாவது திரைப்படம் தான் ‘ ஒன்ஸ்மோர்’. 1997 இல் வெளியாகிய இத்திரைப்படம் காதல், காமெடி, சென்டிமென்ட் கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது.

இத்திரைப்படத்தில் தான் முதன் முதலில் விஜயுடன், சிம்ரன் ஜோடி சேர்ந்தார். இது அவருக்கு இரண்டாவது படமாக அமைந்தது. விஐபி படத்தில் தான் சிம்ரன் தமிழில் முதலில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மகனாக இருக்கும் விஜய் முதலில் மோசமான பாதைக்கு சென்று, பின்னர் பொறுப்பான நபராக மாறுவது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் ஒன்ஸ்மோர் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை சிம்ரன் ஒருநாள் தாமதமாக வந்துள்ளார். இதனால் கோபமாக படப்பிடிப்பை பேக் அப் செய்துவிட்டாராம் இயக்குனர் எஸ் ஏ சி. கொஞ்சம் நேரம் தான் தாமதமாகிவிட்டது என்று சிம்ரன் எடுத்துக் கூறியும், கோபம் குறையவில்லை என்று கூறப்படுகிறது.