கர்ப்பமாக உள்ள 20 வயதான மனைவி! திருமணமான 7 மாதத்தில் கணவன் எடுத்த எதிர்பாராத முடிவு!!

தமிழகத்தில் திருமணமான 7 மாதத்தில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (21). விவசாயியான இவரது மனைவி அபிதா (20). இவர்கள், 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

   

அபிதா கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விக்னேஷ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த விக்னேஷ், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் விரைந்து வந்து, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.