அடேங்கப்பா.. என்ன ஒரு புத்திசாலித்தனம்.. இப்படி கூட மனிதர்களை ஏமாற்றலாமா..? இந்த நாய்க்குட்டி செய்த செயலை பாருங்கள்…

இந்த காலத்தில் மனிதர்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம் போல. ஒரு சிலர் தங்கள் இரக்க குணத்தால் சட்டென்று ஏமார்ந்து விடுவார்கள். அப்படிதான் இங்கு நடந்த சம்பவமும். இப்போதெல்லாம் விலங்குகள் கூட மக்களை ஈசியாக ஏமாற்றுகிறது. பொதுவாகவே மக்கள் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணியாக இருப்பது நாய்க்குட்டி தான். அது அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்ந்து வரும். இந்த வாழ்க்கையும் சில நாய்க்குட்டிக்கு மட்டுமே. 

   

பல குட்டிகள் தெருக்களில் தான் வளர்கிறது. அதற்கு யாரேனும் சாப்பாடு வைப்பார்கள். சில நேரங்களில் வீடுகளில் சென்று திருடிகூட சாப்பிடும். ஒரு சில நாய்குட்டிகளுக்கு ஒருமுறை சாப்பாடு வைத்தாலே போதும் அவ்வளவு நன்றியாக இருக்கும். இந்நிலையில் இந்த வீடியோவில் நாய்குட்டியின் செயல் மக்களை சிரிக்க வைத்துள்ளது. இதில் அந்த நாய்க்குட்டி காலில் ஆட்டிப்பட்டது போல் பாவமாக நின்று கொண்டிருந்தது. அதை பார்த்த ஒருவர் அவரிடம் உள்ள பிரட்டை கொடுத்தார்.

 

அதை வாங்கிய பின் அந்த நாய்க்குட்டி நன்றாக நடந்து போனது. இதை பார்த்த பலரும் என்னடா இந்த நாய்க்குட்டி இப்படி ஏமாற்றுதே என்று யோசித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..