கோலிசோடா படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்த…. நடிகை சாந்தினியின் கணவர் இவரா….? அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…!!!

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பிடித்தது. அந்த படத்தில் ஹீரோயின் ஆகவும் பள்ளிக்கூட பெண்ணாகவும் சாந்தினி நடிகையாக  அறிமுகமாக இருந்தார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

   

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் எத்திலுராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது கோலி சோடாபடத்திற்கு இந்த பெண் கரெக்டாக இருப்பார் என்று நினைத்தார் விஜய் மில்டன்.

இதனால் விஜய் மில்டன் அவரை பாலோ செய்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணின் வீட்டிற்க்கே சென்று பெற்றோர்களிடம் பேசி இந்த படத்தில் நடிக்க வைக்க சம்மதிக்க வைத்ததாக சுவாரசியமான கதை ஒன்றும் இருக்கிறது.

கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக ரசிகர்களின் மனதில் கொள்ளை கொண்டார் சாந்தினி.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி இந்தத் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விக்ரம் நடிப்பில் 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஜீவாவின் சீறு  என்ற படத்தில் நடிக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு ஹீரோயினாக இவர் நடித்த குரங்கு கையில பூ மாலை படம் சொதப்பி விடவே சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.

ஆனால் நீண்ட காலம் இவர் அதற்காக காத்திருக்காமல் உடனடியாக பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

பொதுவாகவே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள், தற்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

சாரதி என்பவரோடு திருமணம் ஆகி இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் தனது முதல் திருமண நாளன்று  ஏப்ரல் 11, 2021 அன்று தனது கணவருடனான புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் “வாழ்க்கைக்கான என் மனிதன். “என் மகிழ்ச்சியின் ஆதாரம் நீ என் உலகத்தின் மையம் மற்றும் என் இதயம் முழுவதும் நீயே.

” நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் ஆத்துக்காரா என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சாந்தினி

முதன் முதலாக தன்னுடைய குழந்தை கையில் ஏந்திய போட்டோவையும் சமீபத்தை போட்டோவையும் இணையத்தில் வெளியிட்டார்.

இதை பார்த்து ரசிகர்கள் திருமணம் ஆகி குழந்தையே பிறந்திருச்சா என்று கேள்வி எழுப்பினர்.