![lokesh (20)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/09/lokesh-20.jpg)
நடிகை கௌசல்யா
தமிழ் சினிமாவில் 90ஸ் களில் மக்களின் மனதை கொள்ளை கொண்ட ஹீரோனிகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவர், காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா, பின் சில ஆண்டுகளிலேயே சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
மேலும் இவர் பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், பூவேலி திரைபடத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
திருமணம் செய்யாதது ஏன்
அண்மையில் இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவிற்கு ஒரு சரியான நபரை நான் பார்க்கவில்லை எனவும் ஒருவேளை நான் எதிர்ப்பார்க்கும் ஒரு நபரை சந்தித்திருந்தால் கண்டிப்பாக திருமணம் குறித்து யோசித்து இருப்பேன் என்று கூறினார். மேலும் நான் சினிமாவில் இருந்த விலகி இருந்தபோது கிரிக்கெட் வீரரை காதலித்ததாகவும், பின் Breakup ஆனதாக செய்திகள் எல்லாம் வந்தது.
இதனையடுத்து நான் திருமணம் செய்யாததற்கு காரணம் அதிகமாக என்னுடைய அம்மா, அப்பாவோடு ஒன்றி வாழ்ந்து விட்டேன். எனவே நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது மற்றும் அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவும் முடியாது. இதுவும் ஒரு காரணமாக இருந்தது. இவ்வாறு அதில் பேசியுள்ளார்.