
நடிகை சுனைனா
தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இளம் நடிகர்களுடன் நடித்து வரும் சுனைனா, சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமையவில்லை.
இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இறுதியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பல கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனையடுத்து தெறி படத்தில் விஜய்யுடன் சிறிய ரோலில் நடித்திருப்பார்.
லேட்டஸ்ட் போட்டோஸ்
சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுனைனா, அவ்வப்போது அவருடைய க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் அழகிய கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.