![lokesh (32)](https://awakeindiapac.com/wp-content/uploads/2023/09/lokesh-32-1.jpg)
ரம்யா கிருஷ்ணன்
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் படையப்பா, பாகுபலி போன்ற படங்களில் நடித்து, என்றுமே நம் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது 24 ஆண்டுகளுக்கு பின், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் ரஜினியின் மனைவி ரோலில் நடித்திருக்கிறார்.
மேலும் இவரை லீலாம்பரி, ராஜமாத சிவகாமிதேவி போன்ற இரு கதாபாத்திரங்களும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் கலக்கிக்கொண்டு இருந்தவர் திருமண வயதை தாண்டியும், திருமணம் செய்யாமல் இருப்பது பற்றி அனைவரும் கேள்வி எழுப்பினர்.
முன்பு இவர் இயக்குனர் கிருஷ்ண வம்சியுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக சோசியல் மீடியாக்களில் பேசப்பட்டு வந்தது. இதையறிந்த ரம்யாவின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்து, அவசர அவசரமாக 2003-ல் கிருஷ்ணா வம்சியுடன் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் அவரின் திருமண வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.
அதில் சந்திரலேகா படத்தை இயக்கிய போது தான், கிருஷ்ண வம்சியுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் லிவ்விங் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்த நிலையில், பின் சண்டை, விவாகரத்து பேச்சு, பிரிவு, மீண்டும் சேருவது என்று மாறி மாறி வாழ்க்கை போக ஒருவழியாக இருவரும் இறுதியில் இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வருகிறோம் என்றார். மேலும் எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவ்வாறு நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.