விடுமுறையில் மகன்களோடு வெளிநாட்டிற்கு பறந்த விக்ராந்த்.. குடும்பத்தினரோடு உற்சாகமாக இருக்கும் அழகிய புகைப்படங்கள்..!

நடிகர் விக்ராந்த் கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து எங்கள் ஆசான், பாண்டியநாடு, கோரிப்பாளையம், தாக்க தாக்க, கெத்து, வெண்ணிலா கபடி குழு-2, லால் சலாம் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

தமிழ் திரையுலகில் டாப் கதாநாயகனான தளபதி விஜய்யின் தம்பி தான் விக்ராந்த். திறமையான நடிகராக இருந்தாலும், அவரால் பெரிய அளவில் திரையுலகில் வெற்றி பெற முடியவில்லை.

கிரிக்கெட் வீரரான இவர் நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட்டில் தவறாமல் இடம்பெற்று விடுவார்.

மேலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

இவருக்கு மானசா என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

அவ்வபோது இணையத்தில் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடும் விக்ராந்த் தற்போது, குடும்பத்தினரோடு விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு பறந்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.