விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் ரியாலிட்டி ஷோக்கில் ஒன்று ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். இந்நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர் கோபிநாத் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார். இவர் தொகுத்து வழங்கும் விதத்திற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இதைத்தொடர்ந்து இவர் சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டும் வருகிறார்.
முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்னர் விஜய் டிவியில் அறிமுகமானார். தன்னம்பிக்கை ஊட்டும் உரைகளை இவர் தொடர்ந்து பல கல்லூரி விழாக்களில் வழங்கி வருகிறார். ‘நீயா நானா’ நிகழ்ச்சி விஜய் டிவியின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்று.
இந்த நிகழ்ச்சி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம், சிகரம் தொட்ட மனிதர்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து நீயா நானாவில் நுழைந்த இவர் இன்று வரை இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
‘நீயா நானா’ கோபிநாத்திற்கு வெண்பா என்ற மகள் உள்ளார். அவருக்கு கிட்டார் வாசிப்பது மிகவும் பிடிக்கும். அவர் கிட்டார் வாசிக்கும் போது, எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ….
View this post on Instagram