வடிவேலு கூப்பிட்டு பாராட்டினா அவ்வளவு தான்… வடிவேலுவின் உண்மை முகத்தை புட்டு புட்டு வைத்த பிரபல நடிகை..!

வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி தனக்கென தனி பெயர், புகழை சம்பாதித்து இருக்கும் ஜோடிகள் ஆர்த்தி கணேஷ்கர். தமிழ் சினிமாவில் வைகை புயல் என்ற பெயரோடு வலம் வருபவர் வடிவேலு. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ஆர்த்தி, நடிகர் வடிவேலுவை பற்றி பேசி உள்ளார்.

   

அவரோட நடிக்கும் போது நம்ம நன்றாக நடிச்சுட்டா “அந்த சீன் முடிந்ததும் செல்லம் செமையா இருந்துச்சு… நல்லா பண்ணிட்ட” என்று மனதார பாராட்டுவார். ஆனால் அந்த சீன் படத்தில் இருக்கவே செய்யாது. காரணம் தன்னைவிட நன்றாக ஒரு காமெடி நடிகர் நடித்து விட்டால் அந்த படத்தில் அந்த சீனே இல்லாமல் செய்து விடுவது தான் வடிவேலுவின் குணம்.

மேலும் 24 ஆம் புலிகேசி படத்திற்காக கோவை சரளாவையும், என்னையும் தான் முதலில் நடிக்க முடிவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் வடிவேலு அவர்களெல்லாம் பார்த்த மூஞ்சிகள் என்று கூறி, நடிக்க விடாமல் தடுத்து விட்டார். வடிவேலு ஒரு பாம்பு மாதிரி, குணம் அப்படி மாறி மாறி இருக்கும். இவ்வாறு அந்த பேட்டியில் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.