நீங்கள் விட்ட கடைசி மூச்சு இங்க தான்.. கணவரின் நினைவு நாளில்.. கலங்க வைத்த சேதுராமன் மனைவி..!

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் வருடத்தில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். நடிகர் சந்தானத்தின் நண்பரான இவர் தோல் மருத்துவர். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் இருந்த நிலையில் திடீரென்று கார்டியக் அரெஸ்ட் ஏற்பட்டு கடந்த 2020 ஆம் வருடத்தில் மரணமடைந்தார். அவரின்  மனைவியான உமையாள் தன் கணவரின் மருத்துவமனையையும் குடும்பத்தையும் கவனித்து வரும் நிலையில், கணவரின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, 1461 நாட்கள் மற்றும் நான்கு வருடங்கள் மற்றும் எண்ணிக்கொண்டே செல்லலாம். இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

அந்த நேரத்தில் தான் உங்களின் இறுதி மூச்சு இந்த உலகத்தில் இருந்தது. நீங்கள் உடலால் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்றும் நம் குடும்பத்தின் பலமாக தான் இருக்கிறீர்கள்.

உங்களை ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்களைப் பற்றியே ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டிருக்கிறோம். எங்களின் எண்ணங்கள், செயல்கள், சிரிப்புகள் என்று அனைத்திலும் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கையை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இது நடந்து விட்டது. மற்றொரு வடிவத்தில் நீங்கள் மீண்டும் எங்களிடம் வந்து விடுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Uma (@uma.sethuraman)