இந்த 12 வருசத்துல.. அது மட்டும் நடக்கல… திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஜோ..!

கோலிவுட்ல சிறந்த காதல் தம்பதிகளாக வலம் வரும் சூர்யா ஜோதிகா பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நீண்ட வருடங்களாக ரசிகர்களின் விருப்பமான தம்பதியாக குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கு முன் உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

   

பல வகைகளில் ஜோதிகாவிற்கு சூர்யா துணை நிற்கிறார். ரொமான்டிக் ஹீரோவான அவர், நல்ல கணவராகவும் இருந்து ரசிகைகளை கவர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பேட்டி ஒன்றில் ஜோதிகா தங்கள் திருமணம் எப்படி நடந்தது? என்பது குறித்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நான்கு வருடங்கள் சூர்யாவின் பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருந்தோம்.

திடீரென்று அவர்கள் சம்மதித்த உடன் எனக்கு சந்தோசமாக இருந்தது. அந்த சமயத்தில் நான் நான்கு திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தேன். வாங்கிய முன்பணத்தை எல்லாம் திரும்ப கொடுத்துவிட்டு திருமணத்திற்கு தயாராகி விட்டேன். அதுதான் எனக்கு நல்லது என்று தோன்றியது.

திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. ஒரு முறை கூட நாங்கள் சண்டை போட்டதில்லை. அதை வெளியில் சொல்லக்கூடாது. இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எனக்கு பெரிய பலமாக சூர்யா எப்போதும் துணை நிற்கிறார் என்று தெரிவித்துள்ளார்.