சந்தானம் ஹீரோ ஆனது தான் பிரச்சனை.. மனம் விட்டு பேசிய லொள்ளு சபா உதயா..!

90-களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை  மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில், அன்றைய காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது லொள்ளு சபா தான். புதிதாக வந்த திரைப்படங்களின் காட்சிகளை தங்கள் பாணியில் நடித்து கலாய்த்திருப்பார்கள்.

   

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அப்போது மிகப்பெரிய அளவில் ஆதரவு இருந்தது. அந்நிகழ்ச்சி மூலம், வெள்ளி திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் சந்தானம். அவரை போன்று ஜீவா, மனோகர், சேஷூ போன்ற பலரும் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் லொள்ளு சபாவில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பிரபலமானவர், லொள்ளு சபா உதயா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் சந்தானத்துடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் சந்தானம் குறித்து பேசி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது,

நான் தற்போது சந்தானத்தின் நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடிப்பதில்லை. நானாகத்தான் வெளியே வந்தேன். எப்போதும் ஒரே இடத்தில் இருந்து டயலாக்குகளை எழுதிக்கொடுத்து போர் அடித்துவிட்டது. சந்தானம் எதுவும் கூறவில்லை. அவர் லொள்ளு சபாவில் நடிக்கும் போதே கூறுவார்.

அண்ணன் நான் சினிமாவிற்கு போனால், உங்களை அழைத்துக் கொள்வேன் என்று. அதேபோல் திரைப்படங்களிலும் இணைந்து நடிக்க வைத்தார். அவரையெல்லாம் குறை சொல்ல முடியாது. நல்ல மனிதர் தான். ஆனால் நகைச்சுவை நடிகனாக நடித்த போது அவருக்கு கிடைத்த பெயரே  வேற. ஆனால், தற்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தானம் என்றாலே மற்றவர்களை கலாய்ப்பது தான். அதுதான் அவருக்கு பெயரை பெற்று தந்தது. ஆனால், யார் அவரை தூண்டி விட்டார்கள் என்று தெரியவில்லை. கதாநாயகனாக அவர் மற்றவர்களை கலாய்ப்பதில்லை. மேலும், கதாநாயகனாக நடிக்கும் போது அவர் ஒரு திரைப்படத்தில் தான் நடிக்கிறார்.

பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்கும் போது வருமானம் அதிகம் வரும். இதனால் அவர் 100 கோடியை இழந்துவிட்டார் என்று ஒருவர் கூறினார் என லொள்ளுசபா உதயா தெரிவித்துள்ளார்.