என் டயலாக்கை பேசி விஜய் பேமஸ் ஆகிட்டாரு.. பல உண்மைகளை உடைத்த Fefsi விஜயன்..!

ஸ்டண்ட் கலைஞர் மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் பெப்சி விஜயன். தெலுங்கு நடிகரான இவர் தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கிரி, வில்லன், தில் உட்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியவர்.

   

இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றில் போக்கிரி திரைப்படத்தில் தளபதி விஜய் பேசிய, “நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேனா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்ற டயலாக் என்னுடையது என்று கூறி இருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, போக்கிரி திரைப்படம் தெலுங்கில் தான் முதலில் தயாரானது.

அதில் மகேஷ்பாபு தான் ஹீரோ. நான் எப்போதுமே, “நான் ஒரு தடவை டிசைட் பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருப்பேன். அது, படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும்.

எனவே, இயக்குனர் என்னிடம், மாஸ்டர் உங்க டயலாக்கை தான் படத்தில் முக்கியமாக வைக்கப் போகிறோம் என்று கூறினார். நானும் சரி என்று கூறினேன். தமிழில் அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் அந்த டயலாக்கை பேசியவுடன், பேமஸ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.