
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகர், நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பி வருகிறார். அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமி தம்பதி பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தயாரிப்பாளர் ரவீந்தர், தன் சொந்த செலவில் மூன்று படங்களை தயாரித்த நிலையில், அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
பின் சில நாட்களுக்கு முன், திடக்கழிவுகளில் பணமோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவரது தற்போதைய மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்த போதே, பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர் என்றார்.
மேலும் திடீரென மகாலட்சுமி முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவி பரபரப்பை கிளப்பியது. அந்த வகையில் தற்போது “வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என அவரது வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.