ஆஸ்கர் பட கதாநாயகர்களான யானை வளர்ப்பு தம்பதியை கௌரவபடுத்திய ஜனாதிபதி முர்மு… வெளியான புகைப்படங்கள்…

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம் சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மை மற்றும் வெள்ளி தம்பதிகள் குறித்த இந்த ஆவண படத்தை இயக்கியவர் கார்த்தி கி கான்சால் வெஸ். மேலும் படத்தை தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் இந்த விருதை பெற்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கார் அகாடமி விருதுகள் வழங்கும் விழா இவ்விருது வழங்கப்பட்டது.

   

அந்த பிரிவில் போட்டியிட்ட மற்ற நான்கு படங்கள் ஹால் அவுட், தி மறாத்தா மிட் செல் எபெஃக்ட், ஸ்ரெஞ்சர் அட் த கேட் , ஹவ் டூ யூ மேசர் ய இயர் ஆகியவை ஆகும்.  இந்த பிரிவின் கீழ் பரிசு பெற்ற முதல் இந்திய திரைப்படம் தி எலிபன்ட் விஸ்பர்ஸ். அது மட்டுமல்லாமல் போட்டியில் கலந்து கொள்ளும் மூன்றாவது திரைப்படமும் ஆகும்.

இந்த ஆவண குறும்படம் முழுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இது அனாதை யானையான ரகுவின் கதை ஆகும். இந்த யானையை பொம்மா மற்றும் வெள்ளி என்ற இரண்டு தம்பதியினர் பராமரித்து வந்தனர். இந்த ஆவணப்படத்தில் யானை மற்றும் தம்பதிகள் இடையே உறவு மற்றும் பாசப்பிணைப்பு மற்றும் படமாக்கப்படவில்லை.

அங்கு சுற்று இருந்த இயற்கை சூழலும் படமாக்கப்பட்டு இருந்தது. இந்தப் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நெட் பிளிக்சில் வெளியிடப்பட்டது. இந்த வருடம் ஆஸ்கருக்கு தி எலிபன்ட் விஸ்பர்ஸ் படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விருது வென்ற இத்தம்பதிகளை பிரதமர் முதல் மாநில முதல்வர்கள் வரை அனைவரும் சந்தித்து கௌரவப்படுத்தினர். இதைத்தொடர்ந்து தற்பொழுது ஜனாதிபதி முர்மு  ஆஸ்கார் விருது வென்ற இந்த தம்பதிகளை சந்தித்து கௌரவபடுத்தியுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.