காஷ்மீரில் அமர்நாத் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற சாய் பல்லவி… வெளியான புகைப்படங்கள்..

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சாய்பல்லவி.

   

கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி.

இன்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் தியா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

இவரரின் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள புகழ் பெற்ற அமர்நாத் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றுள்ளளார்.

அங்கு சாய் பல்லவி பனி லிங்கத்தை வழிபாடு செய்துள்ளார். அதே சமயம் அங்கு வந்த ரசிகர்களுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.