பள்ளி மைதானத்தில்….. பறை இசைத்து அசத்திய மாணவர்கள்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து பறை இசைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். இதில் பல வீடியோக்கள் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவழித்து வருகிறார்கள்.

   

இதன் மூலமாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் பல கலைகள் அதாவது முந்தைய தலைமுறைகள் பயன்படுத்திய கலைகள் அனைத்தும் அழிந்து கொண்டே வருகின்றது. அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் பள்ளிகளிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கிரவுண்டில் பறை இசைக்கும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதில் ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் நின்று பறை இசைக்கிறார்கள். சுற்றி நின்று அனைவரும் உற்சாகப்படுத்துகிறார்கள், இந்த வீடியோ பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…