‘ரீல் ஜோடி டூ ரியல் ஜோடி’ … மாறப்போகும் ‘தவமாய் தவமிருந்து’ சீரியல் பிரபலங்கள்… யார் தெரியுமா?…

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சிக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மக்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும், சீரியல் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

   

இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘தவமாய் தவமிருந்து’. இந்த சீரியலில் திருமணத்திற்கு பின்னர் சொத்துக்காக தமது பெற்றோரை எதிர்த்து வாழும் குடும்பங்களின் நிலையை எடுத்துக்காட்டுகிறது.

இந்த சீரியலில் கடைசி மகள் மலராக சந்தியா என்பவரும். பாண்டி எனும் கதாபாத்திரத்தில் பிரிட்டோ என்பவரும் நடித்து வருகின்றனர். சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த இவர்கள், தற்பொழுது ரியல் ஜோடியாக மாறப்போகிறார்களாம். விரைவில் இவர்களது திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.