பல முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபலம் திடீர் மறைவு…. அதிர்ச்சியில்  திரையுலகம்… இரங்கல்களை தெரிவிக்கும் திரைபிரபலங்கள்…

விக்ரம், அஜித் குமார், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு  டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்த ஸ்ரீனிவாச மூர்த்தி தற்பொழுது உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

இன்றைய சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர். இவர்களின் பங்கு திரை உலகில் மிக முக்கியமானது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வலம் வந்தவர் தான் ஸ்ரீனிவாச மூர்த்தி . இவர் 90 ல் வெளியான ஓகே  ஒக்கடு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

   

இதை தொடர்ந்து அவர் தமிழின் முன்னணி நடிகர்களான விக்ரம், அஜித் குமார், சூர்யா என பலரது திரைப்படங்களுக்கும் தெலுங்கில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் மோகன்லால், ஷாருக்கான் ,சூர்யா, ஜெயராம், மாதவன் போன்ற பல பிரபலங்களின் படங்களுக்கும் பல மொழிகளில் டப்பிங் செய்துள்ளார்.

இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் குரலுக்கு டப்பிங் செய்துள்ள இவரின் திடீர்  மரணம் அடைந்த செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன சீனிவாச மூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்துள்ளார்.

இவரது திடீர் மரண செய்தி திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை தொடர்ந்து இவரின் மரணத்தை அறிந்த பல முன்னணி பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு இதோ…