கேப்டன் விஜயகாந்திற்கு விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசு.. சந்தோஷத்தில் மூழ்கிய குடும்பத்தினர்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

   

 

விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த என்றும் ஏராளமானோர் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர். அவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

முக்கியமாக சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்பதை கொண்டு வந்தவர் விஜயகாந்த் தான். ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு, டெக்னீசியன்களுக்கு ஒரு சாப்பாடு என அந்த காலத்தில் தனித்தனியாக கொடுத்தனர்.

அதனை மாற்றி ஹீரோவாக இருந்தாலும், டெக்னீசியனாக இருந்தாலும் ஒரே சாப்பாடு என்பதை கொண்டு வந்தவர் விஜயகாந்த்.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.