“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது”…..  அது சரியா தா இருக்கு…. சிறுசு சென்றாலும் சிங்கம் சிங்கம் தான்….. வைரல் வீடியோ….!!!!

ஒரு நபர் சிங்கக் குட்டிகள் இரண்டுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிங்கக்குட்டிகள் திடீரென்று அவரை கடிக்கப் பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வனவிலங்குகள் புலி, சிங்கம் போன்ற அனைத்தும் வீட்டில் வளர்ப்பதற்கு தகுதியான விலங்குகள் கிடையாது. இவை எப்போதும் ஆபத்தானவை. ஒரு இடத்தில் அதனை அடைத்து வைக்க முடியாது.

   

அப்படி இந்த விலங்குகளை அடைத்து வைத்தால் அது தன்னுடைய குணத்தை கட்டாயம் காட்டிவிடும். எப்போது வேண்டுமானாலும் தங்கள் உயிருக்கு ஆபத்தாக இது மாறலாம். நாய் பூனை போன்று செல்லப்பிராணிகளை போல் நம்மால் புலி, சிங்கம் போன்றவற்றை வளர்க்க முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு மனிதர் சிங்கக்குட்டிகளை தடவி கொடுத்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Md Gulzar (@basit_ayan_3748)

தொடக்கத்திலிருந்து அந்த நபர் சிங்கத்தை தொடும்போதெல்லாம் அது கோபமாக உருமுகிறது. பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அவரின் கையை கடிக்க முற்படுகின்றது. அந்த நபர் சுதாரித்துக் கொண்டு பின்னோக்கி சென்று விட்டார். விலங்குகள் எப்போதும் அதன் உண்மை குணத்தை வெளிப்படுத்தி விடும். அது சிறிய விலங்காக இருந்தாலும் சரி பெரிய விலங்காக இருந்தாலும் சரி . நாம் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் அதனை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.