கணவன் உயிரிழந்த தகவலை அறியாமலேயே இறந்த மனைவி : அனாதையான 2 பிள்ளைகள்!!

இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர்.

டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன் ஜசல் (45). இவர் கணவர் பவன் குமார்.இருவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

   

இதில் பவன் உடல் நிலை மோசமானது. ஆனால் டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறையால் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

பின்னர் சண்டிகருக்கு கணவரை உறவினர்கள் உதவியுடன் ஜசல் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் ஜசல் உடல் நிலையும் மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் பவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அறியாமலேயே இருந்த ஜசல் நேற்று உயிரிழந்துள்ளார். தம்பதிக்கு 20 வயதில் மகனும், 14 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளனர்.

இது குறித்து ஜசல் பணிபுரிந்த கல்லூரியின் பிரின்சிபால் ஹர்பிரீத் கவுர் கூறுகையில், விரைவில் ஜசலுக்கு கல்லூரில் பதவி உயர்வு கிடைக்கவிருந்தது. அந்த மகிழ்ச்சியான தகவலை அறியாமல் இறந்துவிட்டார்.

பவன் மற்றும் ஜசல் மரணம் அதிர்ச்சியளிக்கிறது, கல்லூரியின் மட்டத்தில், நாங்கள் குடும்பத்திற்கு உதவ முயற்சிக்கிறோம். கல்லூரியின் நிர்வாகக் குழுவின் தலைவர், அவர்களின் மகன்களின் கல்விக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார் என கூறியுள்ளார்.