கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்கும் தமிழ் சீரியல் நடிகை சரண்யா! மனதை உருக்கும் பதிவு..!

சின்னத்திரையில் சூப்பர் நடிகைகளில் சரண்யா துராடியையும் சேர்க்க வேண்டும். உண்மையிலேயே நல்ல நடிகை மட்டும் கிடையாது ஒரு சிறந்த சமூக ஆர்வலரும் கூட.

அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார்.

   

இது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உ ணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.

இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது.

பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது. நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள்.

அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும் என்று பதிவிட்டுள்ளார். சரண்யாவின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.