பசியால் துடித்த பூனைக்கு…. உணவிட்ட அந்த மனசுக்கே இருக்கே….. நீங்க ரொம்ப கிரேட் சார்….. வைரலாகும் வீடியோ…!!!!

பசி என்று ஓடிவந்த பூனைக்கு கறிக்கடைகாரர் கறி அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் பெருமளவில் பகிரப்படுகின்றத. அதில் பெரும்பாலும் பூனை குட்டிகளின் அட்ராசிட்டிகள் தான் அதிகமாக இருக்கும். அவையும், அவை செய்யும் செயல்களும் க்யூட்டாகவும் இருப்பது தான் வீடியோக்கள் வைரல் ஆவதற்கு காரணம். பலரது வீடுகளில் பூனைக்குட்டிகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றன.

   

அவைகள் செய்யும் குறும்புத்தனமான வேடிக்கையான விஷயங்களை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டு வைரல் ஆக்கி விடுகின்றனர் அதன் உரிமையாளர்கள். இத்தகைய காட்சிகளை நாம் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகின்றது. அப்படிப்பட்ட ஒரு வீடியோவை தான் தற்போது நாம் பார்க்க போகிறோம் . முதலில் இந்த வீடியோவை பார்க்கும் போது இது வெளிநாட்டில் நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது.

பொதுவாக கறி கடைக்குள் நுழையும் நாய், பூனை ஆகியவற்றை அதன் உரிமையாளர்கள் விரட்டி அடிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த கடையின் உரிமையாளர் ஒரு பூனைக்கு அன்பாக உணவிடும் சம்பவம் பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. முதலில் கடைக்குள் நுழைந்த பூனை மியாவ் என்று கத்தி தனக்கு பசிக்கின்றது என்பதை அந்த கடையின் உரிமையாளருக்கு தெரியப்படுத்துகின்றது. அந்த உரிமையாளரும் அன்பாக அந்த பூனைக்கு ஒரு தட்டில் கறியை வைத்து அதன் அருகில் வைக்க பசியில் துடித்துக் கொண்டிருந்த பூனை தாவி பாய்ந்து அதனை வேகமாக உண்கின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.