மனைவியை பி.ரி.ந்தது ஏன்? நடிகை சீதா குறித்து நினைவுகளை பகிர்ந்த பார்த்திபன்…!

நடிகர் பார்த்திபன்_சீதா தம்பதியினர் ஒருகாலத்தில் திரைத்துறையில் வெ.ற்.றிகரமாக கோலோச்சியவர்கள். இப்போது இந்த தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முதல் மகள் திருமணத்தில் இருவருமே சேர்ந்து நின்று, அதை சிறப்பாக செய்தனர்.

   

சினிமா துறையில் மிகவும் வெற்றிகரமாக கோலோச்சிய நிலையிலேயே காதலித்து பார்த்திபனை கல்யாணம் செய்து கொண்டவர் நடிகை சீதா. சீதா பாண்டியராஜன் நடித்து, இயக்கிய ஆண்பாவம் படத்தில் அ.றிமு.கமாகி, பார்த்திபனோடு புதியபாதை படத்தில் சேர்ந்து நடித்தார். அப்போது இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

அதேநேரம் இந்த காதலுக்கு சீதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, வீட்டைவிட்டு வெளியேறி பார்த்திபனை கல்யாணம் செய்துகொண்டார், இந்நிலையில் இவர்கள் இருவரும் கருத்து வே.ற்.றுமையால் பி.ரி.ந்.துவிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

அதில் அவர், ‘’என்னை பொறுத்தமட்டில் பெற்றோர் பார்த்துவைத்த கல்யாணத்தைவிட, காதல் திருமணம் செண்டிமெண்ட்கள் மற்றும் எமோஷனல் நிறைந்தது. வாழ்க்கையில் சின்ன மாறுபாடு, வேறுபாடு வரும். இந்த ச.ண்.டை.கள் டைவர்ஸ் வரை போய்விட்டால் பி.ரி.வதுகூட காதலில் இணைவதுதான்.

எல்லாத்தையும் சகிச்சுவிட்டு கடைசிவரை வாழணும்ன்னு அவசியம் இல்லை. இந்த லைப் எனக்கு ஒருதடவைதான். அந்த பெண்ணுக்கும் அப்படித்தான். வருத்தத்தோட வாழ்வதுக்குப் பதிலாக பிரிந்து சந்தோசமாக வாழலாம். இதும் கூட காதல்தான். குழந்தைகளின் வளர்ச்சி, வாழ்க்கைக்கு நானும், சீதாவும் பங்களிக்கிறோம்.”என சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.