திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… இணையத்தில் வெளியான வீடியோ…

தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

   

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த பர்ஹானா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதோடு மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்பொழுது திருச்செந்தூர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கோவிலில் மூலவருக்கு நடந்த உச்சிகால அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் சண்முகர், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…