நீண்ட காலமாக வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் நடித்து வருகின்றன.
வெள்ளித்திரையில் தற்போது புதுமுக நடிகைகள் பலரும் அறிமுகமானார்கள்.
பின்னர் வெள்ளித் திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர்.
அப்படி வரும் நடிகைகள் பலரும் மீண்டும் சின்னத்திரை பக்கம் வருவதில்லை. ஆனால் தற்போது சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிக் கொண்டு வருபவர்தான் அர்ச்சனா மாரியப்பன்.
பொதுவாக நடிகைகள் என்றாலே திருமணமாகிவிட்டால் நடிப்பதை நிறுத்தி விடுவார்கள்.
ஆனால் நடிகை அர்ச்சனா மாரியப்பன் வாழ்க்கையில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
ஏனென்றால் திருமணம் முடிந்த பிறகு தான் சினிமாவில் நடிக்கவே வந்தார் அர்ச்சனா மாரியப்பன்.
கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவர் ஆரம்பத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல்’ படத்தில் சிறு கதாபாத்திரம் நடித்திருந்தார்.
அதன் பின்னர் கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து இவர் சீரியலும் நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி ,வள்ளி ,அழகு, பொன்மகள் வந்தாள், போன்ற பல்வேறு பிரபல தொடர்களின் நடித்து வீட்டு இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
அர்ச்சனா மாரியப்பன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். இவர் தற்போது மஞ்சள் நிற புடவையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் ஆனது ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டை செய்து வருகின்றனர்.