திருச்செந்தூரில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 8 வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

   

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த கனா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது கதைக்கு முக்கியத்துவம் மற்றும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் சரியான முறையில் தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கிளாமர் ரூட்டை மாற்றியுள்ளார்.

90களில் கொடி கட்டி பறந்த நடிகையான நடிகை சில்க் சுமிதா பயோபிக் கதையை வைத்து சொப்பன சுந்தரி என்ற டைட்டிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்தார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த கிரேட் இந்தியன் கிச்சன், மற்றும் சொப்பன சுந்தரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

அதே சமயம் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தீரா காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

தனது அண்ணன், தாய் மற்றும் சித்தி ஆகியோருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார்.

சுவாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை பார்த்ததும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தனர்.

சிரித்துக்கொண்டு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற சுவாமி தரிசனம் செய்தார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.