‘நண்பன்’ திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவர்  தானா?…. இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது லியோ திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ‘தளபதி 68’ திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைய உள்ளார். தளபதி விஜயின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று ‘நண்பன்’.

   

இத்திரைப்படம் 2012-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டானது .இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மூவரும் நண்பர்களாக நடித்திருந்த திரைப்படத்தில், இலியானா ஹீரோயின் ஆக நடிக்க, சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் வெளிவந்த த்ரீ இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் தான் நண்பன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை சிறப்பாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு இயக்குனர் சங்கர் கொடுத்திருந்தார். நண்பன் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று ஸ்ரீ வர்சன் எனும் கதாபாத்திரம். இக்கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் சத்யன் நடித்திருந்தார்.

ஆனால் தற்பொழுது கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யன் இல்லை என்ற தகவல் இணையத்தில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது இக்கதாபாத்திரத்தை முதன் முதலில் ஏற்று நடிக்க இருந்தவர் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து என்று கூறப்படுகிறது. திடீரென அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதால் நடிகர் சத்யன்  கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். ஆனால் இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .