விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீரியல் தொடர்ந்து மக்கள் மத்தியில் முன்னணி இடத்தையும் பிடித்து உள்ளது .பாக்கியலட்சுமி சீரியலில் தனி ஒரு ஆளாக நின்று ஒரு பெண் குடும்பத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் பார்த்துக் கொள்கிறாள் என்பதை அழகாக எடுத்துரைக்கின்றனர்.
தற்பொழுது இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா. இவர் இந்த தொடரில் ஏற்று நடிக்கும் இந்த கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக நடிகை நேஹா. இவருக்கு மொத்தம் ஏழு லட்சத்திற்கும் மேலாக ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.
இவர் தனது அம்மா கர்ப்பமாகி தற்பொழுது தனக்கு தங்கை பிறந்திருக்கிறார் என்று சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து அவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவர் சிஎஸ்கே அணி வீரரான பத்ரிநாத்தை காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்த இனியா இதற்கு நான் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை என்று புன்னகையுடன் விளக்கம் அளித்துள்ளார். தற்பொழுது இவரின் இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.