விஜயகாந்த் மிரட்டி மிரட்டி தான்… அதெல்லாம் பண்ணுவாரு… MS பாஸ்கரின் மனம் திறந்த பேட்டி…!

நடிகர் எம் எஸ் பாஸ்கர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, விஜயகாந்த் எல்லோருக்கும் தாய் போன்றவர். தர்மபுரி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மிரட்டி சாப்பிட சொல்லுவார். அந்த படப்பிடிப்பு முடிந்த போது எட்டு கிலோ எடை கூடி விட்டேன். அந்த அளவிற்கு நிறைய சாப்பிட வைத்து விடுவார்.

   

பாஸ்கர் வாங்க, வாங்க சாப்பிடுங்க, உட்காருங்க என்று மிரட்டுவாரு. அதட்டி தான் சாப்பிட வைப்பாரு. சாப்பிடாமல் விடமாட்டாரு. பாயாசம் சாப்பிடுங்க, ஜீரணமாகிடும் என்பார். மதியம் நிறைய சாப்பிட்டு முடித்தவுடன் கண் சொக்கி தூக்கம் வந்துவிடும். உடனே, அவர் இயக்குனரிடம் பாஸ்கர் அதிகம் சாப்பிட்டு விட்டார்.

அவர் தூங்கட்டும் என் காட்சிகளை எடுத்துவிட்டு அதன் பிறகு அவருக்கான காட்சிகளை எடுங்கள் என்று கூறுவார். ஒரு தாய் தான், தன் பிள்ளை சாப்பிட்டு தூங்குவதை அழகு பார்ப்பார். அந்த மாதிரி தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் என்று கூறியிருக்கிறார்.