கேப்டன் பிரிவை தாங்க முடியாத பிரேமலதா.. என்ன செய்தார் நீங்களே பாருங்க.. வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவின் கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த், தன் 71 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். ஒரு நல்ல நடிகராகவும், சிறந்த மனிதராகவும் விளங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலிலும் சிறப்பான ஆளுமை பெற்றிருந்தார். எனவே, அவரின் மரணம், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். மேலும் நேரில் வர முடியாத நடிகர்கள் சிலர், தற்போது அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி  வருகிறார்கள்.

ஜனவரி 19ல் கேப்டனுக்கு நினைவேந்தல் கூட்டம்.. நடிகர் சங்கம் அறிவிப்பு... !

   

இந்நிலையில் தற்போது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயத்தை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்திருப்பதாக, காணொளி ஒன்றை அவரது மகன் விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பிரபல நிறுவனத்தோடு இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவருடைய திரு உருவத்தை தனது கையில் பச்சை குத்தி கொண்ட வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,

View this post on Instagram

 

A post shared by Irezumi tattoos india (@irezumitattoosindia)