கராத்தேவில் சாதனை படைத்த மகன்…. பெருமிதத்தில் சூர்யா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சமூக பொறுப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கின்றார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் பழமொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் பேவரட் ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தற்போது மும்பைக்கு குடிப்பெயர்ந்து இருக்கின்றனர்.

திருமணம் முடிந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஹிந்தியிலும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு தியா என்கின்ற மகளும் தேவ் என்கின்ற மகனும் இருக்கிறார்கள். தற்போது தேவ் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது கராத்தேவில் அவர் பிளாக் பெல்ட் பெற்று இருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அவரது தந்தை சிவக்குமார் மற்றும் அவரின் மனைவி கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.

மேடை ஏறி தனது மகனுடன் சேர்ந்து பிளாக் பெல்ட் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் எடுத்துருக்கின்றார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.