‘இப்படித்தான் எனது உடல் எடை அதிகமானது’… தனது உடலைப் பற்றி உருக்கமாக பேசிய ரவீந்தர்… அச்சச்சோ… அப்படியா?…

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் லிப்ரா ப்ரொடக்சன் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள் முதலில் இவர்களின் திருமணம்தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

   

ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் தான். இவர்களை பலர் விமர்சித்தும், பலர் இவர்களுக்கு வாழ்த்து கூறியும் வந்தனர். அனைத்து விமர்சனங்களையும் சமாளித்து இவர்கள் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பேட்டிகளின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரவீந்தர் இவர் தற்பொழுது நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார் அதில் தனது உடல் எடை எதனால் இவ்வாறு அதிகரித்தது என்பதை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது , தனது கையில் அலர்ஜி ஏற்பட்டதால் அதற்காக வேண்டி மாத்திரைகளை சாப்பிட்டதாகவும்,

அந்த மாத்திரையில் உள்ள போதை பொருட்கள் தனது உடலில் உள்ள கொழுப்பு கரைக்கும் செல்களை அழித்துவிட்டதால் தான் தனது உடல் எடை இவ்வாறு அதிகரித்ததாகவும் சோகத்துடன் கூறியுள்ளார். மேலும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அனைவரும் நற்காலியில் அமர்வார்கள் ஆனால் நான் நாற்காலியில் அமர்ந்தால் அது உடைந்து விடுமோ என்கிற பயம் எனக்கு இருந்து கொண்டே இருக்கும் இப்படி தனது உடலை பற்றி உருக்கமாக பேசியுள்ளார் ரவீந்தர்.