கார் என்பது தற்போது வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு அத்யாவசிய தேவையாக உள்ளது. ஒரு சாமானிய மனிதர் கடுமையாக வேலைக்கு சென்று சம்பாதித்து தங்களுக்கு என்று ஒரு குடும்பம், அந்த குடும்பம் வாழ்வதற்கு தேவையான ஒரு அழகிய வீடு மற்றும் சொந்த கார் என்பது அனைவரின் கனவாக உள்ளது. கார் தற்போது இந்தியா முழுவதும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது.
இதற்கு காரணம் மக்கள் தங்கள் தேவைக்காக கார்களை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் ஏற்படும் விபத்துக்களை சில சமயம் தவிர்க்க முடிவது கிடையாது. சாலைகளில் ஏற்படுவது மட்டுமில்லாமல் வீடுகளிலும் விபத்துகள் ஏற்படுகின்றது. உதாரணமாக பார்க்கிங் செய்யும் இடத்தில் நாம் திருப்பும்போது வண்டி சுவற்றில் மோதி பாதிப்படைகின்றது.
What a grand arrival home ? pic.twitter.com/ilSeNcKexD
— VINOD KUMAR ???????? (@veekay122002) October 7, 2022
சமீபத்தில் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் டெலிவரி எடுத்த நபர் ஒருவர் அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டில் உள்ளவர்களிடம் காட்ட எண்ணியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆக்சிலேட்டரை அதிகமாக அழுத்தியதால் கார் வேகமாக சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது ஏறி கவிழ்ந்தது.
இதனை ட்விட்டரில் What a grand Arrival Home என்று பதிவிட்டுள்ளார். இந்த கார் அங்கிருந்து பைக்குகள் மீது ஏறியது மட்டும் இல்லாமல் தலைக்குப்புற கவர்ந்தது. இதை பார்த்த பலரும் டிரைவர் காரை வளைக்கும் நேரம் பதட்டமடைந்ததால் ஆக்சிலேட்டரை அதிகமாக அமுத்தியுள்ளார். இதனால் தான் அதிக விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.