மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அழுத கணவன்: சடலத்தை சென்று பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரயை சேர்ந்தவர் ரமேஷ்.

இவரது மனைவி ராஜலட்சுமி (36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரமேஷ், கிருஷ்ணகிரி டேம் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

   

இந்த நிலையில் கடந்த 23-ந் திகதி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அழுதுள்ளார்.

ஆனாலும் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கருதிய கிருஷ்ணகிரி தாலுகா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் ரமேசிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ரமேசை பொலிசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.