80ஸ்களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடத்தைக் கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி இழுத்த இடுப்பபழகிதான் பானுப்பிரியா. இவருடைய கவர்ச்சியான கண்களையும், இடுப்பையும் பார்த்து மயங்காத வாலிபர்களே அப்போது இல்லை எனலாம்.
பானுப்பிரியா குச்சிப்புடி, பரதம் போன்ற கலைகளை கற்றவர். தமிழில் நடிகை பானுப்ரியா ‘மெல்ல பேசுங்கள்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவர் நடிகர் பாக்கியராஜ் உடன் இணைந்து நடித்த ‘ஆராரோ ஆரிராரோ’ படம் தான் இவருக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. இவர் சுமார் 80 தெலுங்கு படங்களிலும், 35 தமிழ் படங்களிலும் மேல் நடித்து அசத்தியுள்ளார்.
பானுப்பிரியா 1998ல் ஆதர்ஷ் என்னும் அமெரிக்க மாப்பிள்ளையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு 2005 இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்ற இவர் தனது மகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பானுப்பிரியா தனது பள்ளி படிப்பை நிறுத்தியதற்கான காரணம் பற்றி செய்தி வெளியாகி வருகிறது. அதாவது பானுப்பிரியா பள்ளியில் படிக்கும்போது நடனத்தில் சிறந்து விளங்கியுள்ளார். இதனை பார்த்து நடிகர் பாக்கியராஜ் அவருடைய படத்திற்கு பானுப்பிரியாவை நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார்.
ஆனால் பின்னர் அந்த படத்திற்கான கேரக்டரை விட பானுப்பிரியா மிகவும் குழந்தை போல இருந்துள்ளார். எனவே அந்த படத்தில் இருந்து நடிகை பானுப்ரியாவை பாக்கியராஜ் வேண்டாம் என விலக்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாக்கியராஜ் படத்தில் நடிக்க போவதாக ஆசையில் இருந்த பானுப்பிரியா, பள்ளிக்கூடம் முழுவதும் முன்னதாகவே கூறியுள்ளார். அதன் பின்பு அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், பள்ளியில் உள்ள அனைவரும் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் நடிகை பானுப்பிரியா பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.