விவாகரத்தான நடிகர் பிரசாந்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அறிய புகைப்படங்கள் இதோ…

தமிழ் திரைப்பட  நடிகர்களில் ஒருவர் தான் பிரசாந்த். இந்திய திரைப்பட இயக்குனர்  தியாகராஜின் மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கிற ஒரு தங்கையும் உள்ளார்.

   

இவர் 1990 ஆம் ஆண்டு ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற திரைப்படத்தில் குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

17 வயதிலேயே ஹீரோவாக்கி அழகு பார்த்தார் அவரது  தந்தை.  படத்திற்காக  அவர் சிறந்த  நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

இதை தொடர்ந்து இவர் ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் சிவா கதாபாத்திரத்திலும்,   செம்பருத்தி படத்தில்  ராஜா கதாபாத்திரத்திலும்,   உனக்காக பிறந்தேன் என்ற படத்திற்கு கிருஷ்ணனாகவும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கண்மணி, செந்தமிழ் செல்வன், கல்லூரி வாசல், விரும்புகிறேன் ,வின்னர், ஆயுதம், சாகசம், ஜாம்பவான் ,அடைக்கலம், அப்பு, ஸ்டார், ஜீன்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

1990 முதல் 2005 வரை அஜித், விஜய்க்கு இணையான   நடிகராக ஜொலித்து வந்தவர் தான் நடிகர் பிரஷாந்த்.

நடிகர் பிரஷாந்த் 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளன.

மூன்று ஆண்டுகள் மட்டுமே திருமணமானது நீடித்தது . கடந்த 2008 ஆம் ஆண்டு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

பிரபல தமிழ் நடிகர்  பிரசாந்தின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.