அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த… தனது தீவிர ரசிகைக்காக நடிகர் சூர்யா செய்த நிகழ்ச்சி செயல்… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் சூர்யா .இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

நடிகர் சூர்யா தனது குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்கிறாரோ அதே அளவிற்கு தனது ரசிகர்களையும் அவ்வப்போது சந்திப்பதும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதும் வழக்கமாக வைத்திருக்கிறார். அவர்களது திருமண விசேஷங்களில் கூட அவ்வப்பொழுது  கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த நடிகர் சூர்யா தன்னுடைய தீவிர ரசிகைக்காக சென்னையில் உள்ள தனது இல்லத்திலேயே அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.. தன்னுடைய தீவிர ரசிகையின் குடும்பத்திற்கு ஆறுதல் கடிதமும் எழுதியுள்ளார். மேலும் தொலைபேசியில் குடும்பத்தினரிடம் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் சூர்யாவின் ஆறுதல் பதிவானது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.