தன் கையால் பொங்கல் வைத்து கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்… உடன் இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா?… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ….

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தோடு இணைந்து தனது கையால் பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி  போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இவர் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இதை தொடர்ந்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் ‘மகாநதி’. இதைத்தொடர்ந்து ‘சாணி காகிதம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.

தற்பொழுது இவர் சைரன், ரகு தாத்தா ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார். அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ‘ரிவால்வர் ரீட்டா’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தின் First லுக் போஸ்டரை நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தை கே. சந்துரு என்பவர் இயக்குகிறார்.

தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது கையால் பொங்கல் வைத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் அவருடன் நடிகை பிரியங்கா அருள்மோகனும்  கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி படுவைரலாகி வருகிறது.